ஊனா மக்கெலி உலகினை விட்டும் பிரிந்தார் – ஐ.நா இரங்கல்..

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கெலி, தனது 54ஆவது வயதில் நேற்று(23) காலமானார்.

இவரது மரணம் தொடர்பில் ட்விட்டர் வலைத்தளத்தில் ஐ.நா இரங்கல் வெளியிட்டுள்ளது.

ஊனா மக்கொலியின் மரணத்தை மிகவும் துன்பத்துடன் அறியத் தருவதாகவும் உலகின் மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளாரெனவும் ஐ.நா இரங்கல் தெரிவித்துள்ளது.

அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தை சொந்த இடமாகக் கொண்ட இவர், இலங்கை உட்பட சூடான், கென்யா, அங்கோலா ஆகிய நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் முதலானது பெண், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மக்கெலி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

gallery

 

#rishma