சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் மட்டு…

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை,காலி,மாத்தறை,குருநாகல,புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நீர் விநியோகம் குறைந்த அமுக்கத்தில் வழங்கப்படும், அதாவது நீர் விநியோகம் ஒருபோதும் துண்டிக்கப்பட மாட்டாது மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளுக்கு தேவையான நீர் வழங்கல்கள் பவுசர் மூலமாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஒரு சில மாவட்டங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு ஏற்ப குறித்த நிலைமை மாறலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

#rishma