வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட கூறுகையில், மஹிந்த வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.

(riz)