கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை(28) தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட பல்கலைக்கழக கல்விசாரா சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்பதாலேயே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமைய, அவற்றிற்கு உரிய தீர்மானம் வழங்க தவறும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
#rishma