பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(27) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்நறுவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் இந்த வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர் வெளியேறும் அளவு அதிகமாக காணப்படுவதாகவும், அதனால் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.