கொழும்பு – டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தாமரை கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள சிற்றுண்டி விற்பனை நிலையமொன்றில் இன்று(28) காலை தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ, தீயணைப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் உயிர் சேதங்கள் எதுவுமில்லை என தெரிவிக்கப்படுவதொடு, தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு என சந்தேகிக்கப்படுகின்றதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தார்.
#rishma