சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் 1929 என்ற சிறுவர் தொலைபேசி சேவையை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய தொலைபேசி கட்டமைப்பை, நவீன தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தவுள்ளதாக அதிகார சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதிகாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.