புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் நிலையம் ஒன்றில் இன்று(04) காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தில் வேலை செய்யும் 27 வயதுடைய இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.