கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(06) காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.