கண்டி – திகனவில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி முஸ்லிம் இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(05) நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma