தெல்தெனிய – பல்லேகல பொலிஸ் அதிகாரப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிக்கு உடன் அமுலாகும் வகையில் இன்று(06) நாள் முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திகன பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா கண்டெடுக்கப் பட்டதை தொடர்ந்து அங்கு சிறு பதற்ற நிலை தோன்றியதால், தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma