மீண்டும் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாளை மறுதினம் முதல் சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது