நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(10) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி; ஊவா, சப்ரகமுவ மாகாணங்களுடன், அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100mmக்கும் அதிகளவான மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 – 55Km வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
####