சட்டவிரோதமாக இந்திய கடற் பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கோடிக்கரை கடற்பரப்புக்குள் நுழைந்த போதே, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள், காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பீ.டீ.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிரதேசத்திலிருந்து மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.