இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையுமென, பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபயவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையுமெனவும் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
####
