முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரும் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் ஜனாதிபதி அவர்களை நேற்று(13) சந்தித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன்ன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க ஆகியோரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையே சந்திப்பொன்று நேற்று(13) மாலை டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
தொழில் வல்லுனர்கள், வியாபாரிகள், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணிபுரிவோரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு இருந்ததோடு, ஜனாதிபதியினை வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(குறித்த நிகழ்வுகள் இரண்டினதும் புகைப்படங்கள்)
—————————————















