இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (13) கைது செய்யப்பட்ட சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று(13) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma