கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(15) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இனங்களுக்கு இடையே வன்முறைகளை தூண்டுதல் மற்றும் குரோதமான கருத்துக்களை தெரிவித்தல் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகாமைக்கு எதிராகவே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-Rishma