நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர்கள் இன்று(16) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராகவே திணைக்களத்தின் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக அரச நில அளவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பெசில் டி சில்வா கூறியுள்ளார்.
திணைக்களத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதன் மூலம் பாரியளவான நிதி மோசடி இடம்பெறும் அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.