அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோயாளிகளுக்கும் எதிர்வரும் காலங்களில் கட்டண பட்டியல் ஒன்றை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
இலங்கை சுகாதார துறைக்காக அரசாங்கத்தின் செலவு தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவு இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதலால், அதன் பெறுமதியை சுட்டிக்காட்டுவதற்காக குறித்த இந்த கட்டண பட்டியல் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.