நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாநகரில் போட்டியிட்டு வெற்றியினைப் பெற்ற றோசி சேனாநாயக இன்று(19) நகராதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இன்று(19) மாலை 6 மணியளவில், அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.