ஜா-எல – ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக சுமார் 50 ஊழியர்கள் இன்று(20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 பேர் நேற்று(19) அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.