நுவரெலியாவில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை…

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார்.

நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நகருக்கு விநியோகிக்கப்படும் நீரை சேமித்து வைத்து அவற்றை சுத்திகரித்து குடிநீர் பாவனைக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததுடன், இதனால் நுவரெலியா நகரவாழ் மக்கள் குடிநீர் பாவனையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு நுவரெலியா நகர்வாழ் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.