பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து மீள் பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.