பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 22 ஆவது நாளாக இன்றும்(21) தொடர்கின்ற போதிலும், அரசினால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்விசாரா ஊழியர்கள் கொழும்பில் இன்று(21) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படாமை, வாக்குறுதி அளிக்கப்பட எம்.சீ.ஏ கொடுப்பனவை வழங்காமை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 28ம் திகதி பணிப்புறக்கணிப்பினை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.