தொழிற்சாலையில் விச வாயு கசிவினால் இருவர் பலி…

தம்புள்ளை – மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் விச வாயு கசிந்ததில் அங்கு பணிபுரிந்த பெண்ணொருவர் (30) மற்றும் ஆணொருவர் (19) நேற்று(23) உயிரிழந்துள்ளனர்.

மனம்பிட்டிய பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட மசாலா பொருட்கள் பொதியிடப்படும் தொழிற்சாலையொன்றிலேயே குறித்த இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில் நபரொருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.