சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்…

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நிதி அமைச்சில் இன்று(27) பிற்பகல் நடைபெறவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை 270 ரூபாவால் அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனம் அரசாங்கத்திடம கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 175 ரூபாவால் சமையல் எரிவாயுவை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கமுடியும் என கடந்த வாரத்தில் நடைபெற்ற வாழக்கை் செலவுக்கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

இதேவேளை, பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று(27) கூடவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழு கூட்டத்தில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்தும் பால்மா விலை அதிகரிப்பு குறித்தும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.