சீனா பயணித்துள்ள ஐ.தே.கட்சி பா.உறுப்பினர்களை ஏப்ரல் 01 இற்கு முன்னர் நாடு திரும்புமாறு கோரிக்கை…

சீனாவுக்கு மேற்பார்வை சுற்றுலா மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை நாட்டுக்கு ஏப்ரல் 01ம் திகதிக்கு முன்னர் திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்பார்வை சுற்றுலாவொன்றை மேற்கொண்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் சீனாவுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 06 பேர் ஐக்கிய தேசியக் கட்சியினராவர்.

இந்நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தயாராகும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த ஐக்கிய தேசியக் கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக நாடு திரும்புமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.