அமித் உள்ளிட்ட 10 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வன்முறைகளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேரும் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.