தற்போதைய அரசியல் நெருக்கடியான நிலையில் ஸ்தம்பித்துள்ள இலங்கை
உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை எந்த வளர்ச்சியினையும் அடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டியில் நேற்று(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“.. தற்போது நாட்டின் நிர்வாகம் சரிந்துள்ளது. திறமையானவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. ஒழுங்கற்ற முகாமைத்துவத்தால் நிர்வாக அமைப்பு பாரியளவு சரிவடைந்துள்ளது..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.