வெலிக்கடை சிறைச்சாலையின் துப்பாக்கிச் சூட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
கடந்த 28ம் திகதி மாலை கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று(29) உத்தரவிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலரை கொலை செய்த குற்றதிற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது