ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நாளை(04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
தெற்காசியாவின் ஸ்டாண்டிங் ரிப்போர்ட்டர் மற்றும் சர்வதேச வர்த்தகத்தினை European Parliament’s Committee on International Trade (INTA), the Standing Rapporteur for South Asia, Sajjad Karim of European Conservatives and Reformists (ECR) party பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவினரே நாளை(04) இலங்கைக்கு விஜயம் செய்வுள்ளதுடன் குறித்த குழுவினர் 6 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு GSP+ திட்டம் தொடர்பாக இலங்கையுடனான உடன்படிக்கையின் முதல் கட்ட பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்காக இங்கு வருகை தருவதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் தெரிவித்துள்ளது.