ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக ஐந்து வருட காலம் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்க குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma