பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா…. ?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சில மணி நேரங்களில் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக இணையத்தள ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்படும் கடுமையான அழுத்தங்களால் குறித்த தீர்மானத்தினை பிரதமர் எட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பதவி விலகாது நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் தோற்றால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசு இல்லாமல் போகும் எனவும் சுதந்திரக் கட்சி மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.