பாராளுமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று(04) பாராளுமன்றில் விவாதிக்க உள்ள நிலையில், பாராளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கலகம் அடக்கும் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகாமையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Rishma