பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயற்பட்டவர் தொடர்பிலான தீர்மானம், திங்களன்று(09) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று(06) தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரரேரணைக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், அமைச்சர்களை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கை தொடர்பாக, வினவிய போது, அவர் தனக்கு அவ்வாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என கூறியிருந்தார்.
###