சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – இன்றுடன் நிறைவு….

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நடவடிக்கை இன்றுடன்(07) நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.