அல்ஜீரியா இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

அல்ஜீரியாவில் நேற்று(11) இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவின் பபாரிக் Boufarik பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவ விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.