ஜேவிபி’யினால் இம்முறை இரு மே தின நிகழ்வுகள்…

இம்முறை மே தின நிகழ்வுகளுக்காக தமது கட்சியில் மே தின கூட்டங்கள் இரண்டினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதன்படி, மே 01ம் திகதி மாலை யாழ்ப்பாணத்திலும், மே 07ம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணியாக பீ.ஆர்.சீ. மைதானத்திலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“சமூக நீதி – தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் மக்கள் ஆட்சி” எனும் தொனிப் பொருளில் கீழ் குறித்த பேரணிகள், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் பிரமுகர்களுடன் நடைபெறவுள்ளதாகவும் குறித்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

 

Rishma