வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் இருவரையும் எதிர்வரும், 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.