உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று(15) காலை 10 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளமை காரணத்தினால் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் சேவைகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் சசுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.
உடவளவ நீர்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 6 அடி அளவில் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.