உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று(15) காலை 10 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளமை காரணத்தினால் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் சேவைகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் சசுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.

உடவளவ நீர்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 6 அடி அளவில் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.