உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எந்தவித அபாய நிலைமையும் இல்லை என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த அணைக்கட்டில் கோடுகள் கீறப்பட்டதை போன்றதொரு நிலைமை காணப்பட்டது. இதனை நேற்று(18) நேரில் சென்று அவதானித்த பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அணைக்கட்டுக்களில் வெடிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து மக்கள் அநாவசியமாக அச்சப்பட தேவையில்லை. பாரிய கொங்கிறீட் அணைக்கட்டுகளில் கோடுகள் உருவாவது வழமையானது என பொறியியலாளர்கள் கூறியதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
$