பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் மற்றும் நேரம் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 08 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
$RIzhma