கராபிடிய வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு…

இன்று(27) காலை 7 மணி முதல் கராபிடிய போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டு மருத்துவரான ரிச்சட் பர்மின் மீண்டும் காலி – கராபிடிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு பணிபுறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் பணிபுறக்ககணிப்பு காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர அறுவை சிகிச்சை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.