யாழ்ப்பாண பிராந்திய காவல் நிலையங்களின் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விமுறைகள் இன்று(27) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்.
சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித்தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் காவற்துறையினரின் விடுப்புகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
###