லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை, கேனஸ் தோட்டத்தில் இன்று(02) அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவாது பிரதேச மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.