கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் இன்று(09) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தீயினால் விமான பயணங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்