பெட்றோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் அதிகரிப்பு…?

எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புக்கள் நிலவுவதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பெட்றோல்  மற்றும் டீசல் விலைகள் இன்று அல்லது நாளை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று(09) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில்,இதில் புதிய விலைகளை நிர்ணயிப்பது குறித்தும் தீர்மானங்கள் எட்டப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள்களின் புதிய விலைகளாக, பெட்றோல் – ரூ.20/=, டீசல் – ரூ.9/= , மண்ணெண்ணெய் – ரூ.40/= இனாலும் அதிகரிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது.

 

####