பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு..

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி சேதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.