இன்று(16) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த தனியார் பேரூந்துகளின் வேலை நிறுத்தப் போராட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 12.5 வீதத்தினால் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான பிரேரணையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(22) அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறுவதற்கு உத்தேசித்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.